SS
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பாற்கட லிடைப் பிறந்தாள் - அதுபயந்தநல் லமுதத்தின் பான்மை கொண்டாள்ஏற்குமோர் தாமரைப் பூ - அதில்இணைமலர்த் திருவடி இசைத்திருப்பாள்நாற்கரத் தானுடையாள் - அந்தநான்கினும் பலவகைத் திருவுடையாள்வேற்கரு விழியுடையாள் - செய்யமேனியர் பசுமையை விரும்பிடுவாள்நாரணன் மார்பினிலே - அன்புநலமுற நித்தமும் இணைந்திருப்பாள்தோரணப் பந்தலிலும் - பசுத்தொழுவிலும் சுடர்மணி மாடத்திலும்வீரர்தன் தோளிலும் - உடல்வெயர்ந்திட உழைப்பவர் தொழில்களிலும்பாரதி சிரத்தினிலும் - ஒளிபரவிட வீற்றிருந் தருள் புரிவாள்பொன்னிலும் மணிகளிலும் - நறும்பூவிலும் சாந்திலும் விளக்கினிலும்கன்னியர் நகைப்பினிலும் - செழுங்காட்டிலும் பொழிவிலும் கழனியிலும்முன்னிய துணிவினிலும் - மன்னர்முகத்திலும் வாழ்ந்திடும் திருமகளைப்பன்னிநற் புகழ்பாடி - அவள்பதமலர் வாழ்த்திநற் பதம் பெறுவோம்.மண்ணினுட் கனிகளிலும் - மலைவாய்ப்பிலும் வார்கட லாழத்திலும்புண்ணிய வேள்வியிலும் - உயர்புகழிலும் மதியிலும் புதுமையிலும்பண்ணுநற் பாவையிலும் - நல்லபாட்டிலும் கூத்திலும் படத்தினிலும்நண்ணிய தேவிதனை - எங்கள்நாவிலும் மனத்திலும் நாட்டிடுவோம்.வெற்றி கொள் படையினிலும் -பலவிநயங்கள் அறிந்தவர் கடையினிலும்நற்றவ நடையினிலும் - நல்லநாவலர் தேமொழித் தொடரினிலும்உற்றசெந் திருத்தாயை - நித்தம்உவகையிற் போற்றியிங் குயர்த்திடுவோம்கற்றபல் கலைகளெல்லாம் - அவள்கருணைநல் லொளிபெறக் கலிதவிர்ப்போம்.